Tamilnadu News Live : சென்னையில் நேற்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 2500 பேரை தாண்டியுள்ளது. ம்ந்ந்லும், அதில் சென்னையில் மட்டும் 1000-க்கும் மேல் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 6 ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் 6ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து 80,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், நேற்று பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முகக்கவசம் அணியாத 233 நபர்களிடமிருந்து 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…