உத்தர பிரதேசத்தில் சிவன் கோவிலுக்குள் இறைச்சி துண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் என்னும் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று காலை வழக்கம்போல கோவிலை திறந்த போது கோவிலுக்குள் இறைச்சி துண்டுகள் சிதறி கிடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவில் பூசாரி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பின்னர் கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. மேலும், அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர் அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 5 இறைச்சி கடைகளை அவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்த போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…