Tamilnadu News Live : தமிழகதில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகதில் கடந்த 24 மணி நேரத்தில் 2700 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் நடைபெறுகிறது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபத்தில் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மேலும், இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…