Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா...42வது முறையாக நிறைந்த மேட்டூர் அணை....திறக்கப்பட்ட 16 கண் மதகுகள்..!

madhankumar July 16, 2022 & 11:03 [IST]
அடேங்கப்பா...42வது முறையாக நிறைந்த மேட்டூர் அணை....திறக்கப்பட்ட 16 கண் மதகுகள்..!Representative Image.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலை நிலவரப்படி காவிரி நீர் வரத்து 1.20 லட்சம் கன அடியாக உள்ளது. இந்த தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை அதன்  கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேலும்  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மேட்டூர் அணை 20 அடி உயர்ந்துள்ளது எனவும் இதனால் தனது வரலாற்றில் 42வது முறையாக மேட்டூர் அணை நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மேட்டூர் அணை  கடந்த 8 மாதங்களில் இரண்டாவது முறையாக 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்