தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் உட்பட பல பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன.
தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் உட்பட பல பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன.
இதனையடுத்து, தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. அதன்படி, முதன்முறையாக ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், மார்ச் மாதத்தில் ஒருமுறையில் விலை உயர்ந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு 2 ரூபாய் விலை உயர்த்தியுள்ளது. மேலும், ஹட்சன் நிறுவனம் நாளை முதல் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, மற்ற பால் நிறுவனங்களும் விலை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பால் நிறுவன பாக்கெட்டுகளை வாங்கும் பெரும்பாலான மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…