ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து விபூதியை வாங்கி நெற்றில் பூசிக்கொண்டார்.
பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவர் அங்கிருந்துவெளியேறி கோவிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார். பின்னர் நடிகர் வடிவேலு கோவிலுக்கு வந்திருக்கிறார் என தெரிந்ததும் மக்கள் அனைவரும் அவரை பார்க்க கூடினர், அப்போது அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ‘வாம்மா நீ தான் என் தங்கச்சி’ என கூறியபடி ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…