Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீ தான் மா என் தங்கச்சி....தூய்மை பணியாளரை ஆரத்தழுவி நடிகர் வடிவேலு..!

madhankumar August 11, 2022 & 13:06 [IST]
நீ தான் மா என் தங்கச்சி....தூய்மை பணியாளரை ஆரத்தழுவி நடிகர் வடிவேலு..!Representative Image.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து விபூதியை வாங்கி நெற்றில் பூசிக்கொண்டார். 

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவர் அங்கிருந்துவெளியேறி கோவிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார். பின்னர் நடிகர் வடிவேலு கோவிலுக்கு வந்திருக்கிறார் என தெரிந்ததும் மக்கள் அனைவரும் அவரை பார்க்க கூடினர், அப்போது அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ‘வாம்மா நீ தான் என் தங்கச்சி’ என கூறியபடி ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்