கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, அவரின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நூல்கள் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இணைத் தலைவர்கள் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார். பெண்களின் கனவை நனவாக்கும் வகையில் சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்ததோடு, அரிசி ஒரு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இதேபோல், அனைத்து வகையிலும் பல்வேறு துறைகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகள் ஏராளமாக உள்ளன.
அவரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் நூல்கள் வெளியிட உள்ளதோடு, மாதம் தோறும் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வடிவங்களிலும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர் குழுவின் நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…