Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு: நீதிமன்றம் தீர்ப்பு

Baskarans Updated:
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு: நீதிமன்றம் தீர்ப்பு Representative Image.

வேலூர்: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தனது மனைவியுடன் அமைச்சர் நேரில் ஆஜரானார்.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் அமைச்சர் மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்