20 கோடியில் கிண்டி சிறுவர் பூங்காவை மறுசீரமைத்து முக்கிய பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு மேற்க்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மரங்களின் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
கிண்டியில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு பூங்காவான சிறுவர் பூங்காவை 20 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…