ஊழல் செய்வதிலும் லஞ்சம் பெறுவதிலும் திமுக அரசு முதன்மையாக உள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தனர். அப்போது, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு திமுகவின் ஓராண்டு சாதனை இதுதான் என கூறிவருகின்றனர். இந்தியாவிலே முதன்மையான முதலமைச்சர் ஸ்டாலின் தான் என கூறிவருகின்றனர், ஆம் ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலும் அவருதான் முதன்மை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என கூறிய அவர், இதனை தடுக்க நடவடிக்கை இல்லை என கூறியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக கூறியுள்ளார். பிடிபட்டதே இவ்வளவு என்றல் இன்னும் பிடிபடாமல் எவ்வளவு இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கத்தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம் அனால் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் இளைஞர்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டு இவர்களே இவ்வாறு செய்துவருகின்றனர் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…