Politic News : அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடிதான் என ஓபிஎஸ் ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது. இந்த ஒற்றை தலைமையை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விமர்சித்து காங்கிரஸ் ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில், “அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திரமோடி தான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திரமோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…