தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
ஜூன் 26ம் தேதியான இன்று உலக போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…