சென்னை, சைதாப்பேட்டையில், மழைநீர் வடிகால் பணிகளை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டியில்: 'தமிழகத்தில், 1.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இதற்காக வரும் 12ம் தேதி, ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பெரிய அவர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில், தேசிய முதியோர் மருத்துவமனை கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர்கள் கொண்ட மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் படி சம்மந்தப்பட்டவர்கள் மீதி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிள்ளார்.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 93 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என, 1.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. பொதுமக்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள, ஒரு லட்சம் மெகா சூப்பர் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…