சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3மணி நேரத்தில் 18மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசையில் காற்று மாறுபாடு காரணமாக தெற்கு வங்க கடலில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருவள்ளுர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதைபோல் அடுத்த 3மணி நேரத்தில் 18மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தஞ்சாவூர், நாகை, சேலம், தருமபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதைதொடர்ந்து கனமழை மிக கனமழை பெய்யும் இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…