இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையிக்ல், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அணைவரும் தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் இந்தியாவில் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் கடைகளிலும் தேசிய கொடிகள் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது. மேலும், தன்னார்வல அமைப்புகள் வீடு வீடாக சென்று தேசிய கொடிகளை வழங்கினார்கள்.
தற்போது அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வெளியியிட்ட தகவலின்படி, பிரதமர் மோடியின் “அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி” பரப்புரையால் சுமார் 30 கோடி தேசியக்கொடிகள் விற்கபணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…