Tamilnadu News Live : நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கல்குவாரி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
கல்குவாரி விபத்து
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ந்தேதி இரவு சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது.
உயிரிழப்பு
இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நிவாரணம்
நெல்லையில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “ எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…