மதுரையில் 20 ரேசன் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச்சென்றனர். கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விளைச்சல் குறைவு மற்றும் மழையால் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக தாக்காளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு பயன்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலையை கட்டுத்தப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி ரேசன் கடைகளின் மூலம் தக்காளியை விற்பனை செய்யலாம் என எண்ணியது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளியை மலிவு விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் 20 ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனையறிந்து மக்கள் ஆர்வமுடன் வந்து மலிவு விலையில் விற்கப்பட்ட தக்காளியை வாங்கிச்சென்றனர். வெளிச் சந்தையில் 120 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டுவரும் நிலையில், ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தக்காளியை விற்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…