நேபாளத்தில் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நான்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருவதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
மேற்கு நேபாளத்தில் உள்ள பைதாடி மாவட்டத்தில் உள்ள ஜுலாகாட் எல்லைப் புள்ளி வழியாக நான்கு இந்திய சுற்றுலாப் பயணிகளும் நேபாளத்திற்குள் நுழைந்தனர். பைதாடியில் உள்ள சுகாதார அலுவலகத்தின் தகவல் அதிகாரி பிபின் லேகாக் கூறுகையில், நான்கு இந்திய பிரஜைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பும்படி கூறப்பட்டதாகவும் கூறினார்.
அண்டை நாடான இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்வதால் பைதாடி மாவட்டம் அதிக கொரோனா ஆபத்தில் உள்ளது. தற்போது, பைதாடியில் 31 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அங்கு மூன்று வாரங்களுக்கு முன்பு வரை ஒரு பாதிப்புகூட இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேபாளம் முழுவதுமே கூட தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று நாடு முழுவதும் 1,090 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆறு மாதங்களில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…