நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து, சுவிடன் நாடுகள்ல் இணையும் உடன்படிக்கையில் அமெரிக்கா அதிபர் ஜோ.பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதாக கூறி வந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து நேட்டோவில் இணையும் முடிவை கைவிடுவதாகவும், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் ரஷ்யாவின் அருகில் உள்ள பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக தங்களையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு விண்ணப்பித்தது. இதற்கு ரஷ்யா மட்டுமலலாமல், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள துருக்கியும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது.
இதனைதொடர்ந்து, நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…