ஜம்மு, காஷ்மீருக்குள் ஊடுருவ சுமார் 150 தீவிரவாதிகள் காத்துக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு, காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் பொதுமக்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ராணுவத்தினர் இரும்ம்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஜம்மு, காஷ்மீருக்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மான்ஷெரா, கோட்லி, முசாபராபாத் உள்ளிட்ட 11 இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், அந்த முகாம்களில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்துக்கொண்டிருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இருந்த போதிலும் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி - பூஞ்ச் பகுதிகள் வழியாகவும், நேபாள் வழியாகவும் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான வாய்ப்புகளை அடைக்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…