தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.சங்கரை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.
டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியை சந்தித்துப் பேசிய பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தமிழகத்தில் 2021-ல் இருந்து இதுவரை தேசிய மகளிர் ஆணையத்துக்கு மொத்தம் 730 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது போலீஸார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
ஆனால், மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, தமிழக காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர், புகார்கள் மீதான மேல் நடவடிக்கை குறித்து ஒருமாதத்தில் அறிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். பெண்கள் பொம்மையோ, பொருளோ அல்ல. பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும். தமிழகம் உட்பட 6 மாநில பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை குறித்த புகார்மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தராணுவ வீரர் மனைவி அளித்த புகார் தொடர்பாக விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்று வலியுறுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…