Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு - நீதிபதி தகவல்!

Baskaran Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு - நீதிபதி தகவல்!Representative Image.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை எதிராக அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 17மணி நேரச் சோதனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு பிற்பகல் 2.15மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார். இரு நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து விலகியுள்ளார். விலகியதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்