Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்களே உஷார்....தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...!

madhankumar June 06, 2022 & 10:35 [IST]
மக்களே உஷார்....தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...!Representative Image.

தமிழகத்தில் புதியவகை உருமாறிய பிஏ4 மற்றும் பிஏ5 என்ற தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மாவட்ட அளவில் புத்தக கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் ஊராட்சி அளவில் கண்காட்சி நடைபெறுவது இது தான் முதல் முறை, மேலும் மக்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் தமிழகத்தில் புதிய வகை கொரோன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பறி சோதனை மையத்திற்கு 150 மாதிரிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைத்தோம் அதில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். குறிப்பாக, BA4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், BA5 என்ற புதிய வகை தொற்று 8 பேருக்கும் உறுதியாகியுள்ளது. 12 பேரும் சென்னையை சுற்றி உள்ளவர்கள். அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். தொடர்பில் இறந்தவர்களையும் பரிசோதனை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்