திமுக-வினர் தற்போதுவரை திராவிட மாடல் என்று கூறி வருகின்றனர், ஆனால் அது எனக்கு சுத்தமாக புரியவில்லை என சசிகலா கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட சசிகலா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவின் தலைமையை நான் ஏற்கவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள், அதற்கான செயல்பாடுகளில் நான் ஈடுபட்டு வருகிறேன், அதிமுக இப்படி இருப்பதால் தான் திமுகவினர் பயனடைந்துவருகின்றனர். அதிமுக இணைவதை திமுகவினர் விரும்பமாட்டார்கள். இதேநிலை நீடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். 38 ஆண்டுகால அனுபவம் கொண்ட நான் விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன் என கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மேலும் 600க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அதிலும் சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடந்துள்ளன. சென்னை பெருநகர ஆணையர் அலுவலகம் மூன்றாகபிரிக்கப்பட்டதும் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
திமுகவினர் திராவிட மாடல் என கூறிவருகின்றனர், ஆனால் எனக்கு அது சுத்தமாக புரியவே இல்லை என கோரிய அவர், ஏழை, எளியோரை முன்னேற்ற வேண்டுமென்று என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர். சமத்துவத்திற்காக பாடுபட்டனர். எங்களைப் பொறுத்தவரையில் அது தான் சிறந்த மாடல் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…