நியூயார்க் நகரில் உள்ள அதிகாரிகள் குரங்ககைம்மை வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் நகரில் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தனர்.
மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் சுகாதார ஆணையர் அஷ்வின் வாசன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், 1,50,000 நகரவாசிகள் குரங்கம்மை தொற்றுநோய் அபாயத்தில் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு, நகர சுகாதாரக் குறியீட்டின் கீழ் அவசரகால உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரிகளை அனுமதிக்கும் மற்றும் பரவலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த விதிகளை திருத்தும்.
கடந்த இரண்டு நாட்களில், நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஒரு மாநில பேரிடர் அவசரநிலை அறிவிப்பை அறிவிததிருந்த நிலையில், தற்போது நியூயார்க் நகரத்திலும் பொது அவசர நிலை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது நியூயார்க் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தொகுத்த தரவுகளின்படி, நியூயார்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 1,345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கலிபோர்னியா 799 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த வைரஸ் நீண்ட மற்றும் நெருக்கமான தோலிலிருந்து தோலுடன் தொடர்புகொள்வதன் மூலமும், படுக்கை, துண்டுகள் மற்றும் ஆடைகளைப் பகிர்வதன் மூலமும் பரவுகிறது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், இது முதன்மையாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே பரவியுள்ளது, இருப்பினும் வைரஸ் யாரையும் பாதிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்த வெடிப்பில் அடையாளம் காணப்பட்ட குரங்கு பாக்ஸ் வைரஸின் வகை அரிதாகவே ஆபத்தானது. மேலும் மக்கள் பொதுவாக வாரங்களில் குணமடைவார்கள். ஆனால் வைரஸால் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வலி மிகுந்தவையாக இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…