தாவூத் இப்ராகிம் கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் கூறி, தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த சலீம் ஃப்ரூட் என்ற சலீம் குரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. இவர் வெளிநாடு தப்பியோடிய சோட்டா ஷகீலின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி நிறுவனத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பயங்கரவாத நிதி திரட்டுவதற்காக, சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் அது தொடர்பான தகராறுகளில் சோட்டா ஷகீலின் பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பெரும் தொகையை பறித்து வந்ததில் குரேஷிக்கு முக்கிய பங்கு இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
கடத்தல், போதைப்பொருள் பயங்கரவாதம், பணமோசடி, கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாத நிதி திரட்டுதல் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்இ-முகமது மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தீவிரமாக இணைந்து செயல்படுவது போன்ற பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்கு தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பிப்ரவரி 3 அன்று பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த வழக்கில் இரண்டு பேர் முன்னதாக மே 12ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது இதில் தொடர்புடைய சலீம் குரேஷி என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…