பீகாரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இறந்த தாயின் உடல் அருகே 3 வயது சிறுவன் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் நெஞ்ட்சை உலுக்கியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் ரயில் நிலைய நடைமேடையில் 35 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார், அவரது 3 வயது ஆண் குழந்தை தனது தாய் இறந்தது தெரியாமல், தாயில் சடலம் அருகே தூங்கிக் கொண்டிருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது.
இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணின் உடல் அடையாளத்திற்காக பிணவறையில் வைக்கப்பட்டு, இருந்த போதிலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவளது இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…