நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரங்களில் ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாக கேள்வி எழுப்பிய கேரள எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் அவர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்ளோ ஜி.எஸ்.டி இழப்பீடு என்பதை முடிவு செய்வது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஜி.எஸ்.டி. இழப்பீடு பெற தலைமை கணக்கு அதிகாரியின் (ஏ.ஜி.) சான்றிதழ் அவசியம். சரியான நேரத்தில் அந்த சான்றிதழை தராமல் இருந்தால் அது மாநில அரசிற்கும் ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்குமான பிரச்சனை. இதற்கு மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிட முடியாது.
கேரள அரசு 2017-2018 நிதிஆண்டில் இருந்து ஒருதடவை கூட சான்றிதழ் அளிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு உரிய நேரத்தில் இழப்பீடு அளிக்கவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டுகிறது. இதற்கான தீர்வு என்.கே.பிரேம சந்திரன் மாநில அரசுடன் அமர்ந்து பேசி சான்றிதழை சரியாக அனுப்பிய பின்னர் இழப்பீடு தொகை விடுவிக்கப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2017-18 நிதியாண்டிற்கான ஜி.எஸ்.டி இழப்பீடு சரியாக விடுக்கப்பட்டுள்ளது 2020-2021 நிதிஆண்டுக்கான இழப்பீட்டு தொகை ரூ.4 ஆயிரத்து 223 கோடி என்று தலைமை கணக்கு அதிகாரி சான்றிதழ் அளித்திருந்தார். அதனை தற்போது பரிசீலனை செய்து வருகிறோம்.
இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை ரூ.86 ஆயிரத்து 912 கோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…