நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்க 1 விரிவாக்கம், சுரங்க 2 என மூன்று சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று என்எல்சி நியூ தெர்மல் பவர் நிலையத்தில் பங்கரில் தீப்பிடி எரிந்ததில் அங்கு பணியாற்றிய திருநாவுக்கரசு, சுரேஷ், செந்தில்குமார், செல்வராசு, தக்ஷிணாமூர்த்தி, ஆகிய ஐந்து தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
அனைவரும் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரவு என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…