Politic News : ஓபிஎஸ்-ஐ அஅவமதிக்கும் எண்ணம் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகாரிக்கப்பட்டகிறது. மேலும், ஒற்றை தலைமை குறித்து சலசலப்பு ஏற்பட்டது. இதனால் வரும் 11 ஆம் தேதிக்கு பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்கப்பட்டது,.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை. குறிப்பாக ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…