Karnataka Latest News : கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தன.
இந்தியாவில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக 2 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வியகம், உணவகம் என அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…