Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உணவில் இனி தக்காளிக்கு 'NO'..! - மெக்டொனால்டு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

saraswathi Updated:
உணவில் இனி தக்காளிக்கு 'NO'..! - மெக்டொனால்டு நிறுவனம் அதிரடி அறிவிப்பு  Representative Image.

தக்காளி விலை உயர்வால், இனி தங்களது உணவு வகைகளில் தக்காளி சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக மெக்டொனால்டு நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்துவருகிறது. கிலோ ரூ.120க்கு மேல் பெரும்பாலான இடங்களில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட சமையலில் தக்காளியை தவிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், அதே நிலைப்பாட்டை பிரபல நிறுவனமான மென்டொனால்டும் கையிலெடுத்துள்ளது. 

அந்த வகையில், தக்காளி விலை உயர்வு காரணமாக, தங்களது உணவு வகையில் தக்காளி சேர்ப்பதை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அந்த நிறுவனம் அதிரடியாக  அறிவித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக தக்காளி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உணவுகளை தக்காளி இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் மெக்டொனால்டு நிறுவனத்தின் டெல்லி கிளை மேலதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும் தக்காளி கொள்முதலுக்கான நடவடிக்கைகளை தங்களது நிறுவனம் மேற்கொண்டுவருவதாகக் கூறிய அவர், தரமான உணவுபொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் உறுதியாக இருப்தபாகவும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்