வட கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிப்பது குறித்து அரசு யோசிக்கவில்லை அல்லது திட்டமிடவில்லை என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அமைச்சர் உமேஷ் கட்டி சமீபத்தில் கர்நாடகாவை இரண்டாக பிரிப்பது குறித்து பேசிய நிலையில், "வட கர்நாடகா தனி மாநிலம் குறித்து அரசு மட்டத்தில் எந்த சிந்தனையும் முன்மொழிவும் இல்லை." என்று பொம்மை கூறியுள்ளார்.
பொம்மை மேலும், வட கர்நாடகாவுக்கு தனி மாநிலம் என்ற விவகாரத்தில் அமைச்சர் உமேஷ் கட்டி கூறியதற்கு பதிலளித்த பொம்மை, "இதுபற்றி உமேஷ் கட்டி பேசுவது இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்த கேள்விக்கு அவரே பதில் சொல்ல வேண்டும்." என்றார்.
மாநிலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தியும் கட்டி அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். "பெங்களூரு தெற்கு கர்நாடக மக்களுக்கு மட்டுமே மையப்படுத்தப்பட்ட இடமாக மாறியுள்ளது, அதே நேரத்தில் வட கர்நாடகாவில் உள்ளவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள், அதனால்தான் எங்களுக்கு தனி மாநிலம் தேவை, அது எங்கள் நிகழ்ச்சி நிரல்" என்று அவர் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது டெல்லியில் உள்ள பொம்மை கர்நாடகா பவனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாகவே பெங்களூர் மாநகராட்சி அமைத்த சாலையின் தரம் குறைந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…