Nobel Prize 2022 : இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான தனது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இன்று மருத்துவ நோபல் பரிசுக்கான வெற்றியாளரை அறிவித்தார்.
நவீன மனிதர்கள் மற்றும் அழிந்துபோன நமது நெருங்கிய உறவினர்களான நியாண்டர்டால்கள் மற்றும் டெனிசோவன்களின் மரபணுவை ஒப்பிடும் ஆராய்ச்சியை பாபோ முன்னெடுத்துள்ளார்.
இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசுடன் தொடங்கியுள்ள நோபல் பரிசில் நாளை, இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகும். புதன்கிழமை வேதியியலும் வியாழன் இலக்கியமும். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.
இந்த பரிசுகள் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (கிட்டத்தட்ட $900,000) ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன. மேலும் விருதுகள் டிசம்பர் 10 அன்று வழங்கப்படும். இந்த பரிசு 1895 இல் இறந்த ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பாளர் ஆல்ஃபிரட் நோபல் விட்டுச்சென்ற உயிலின் அடிப்படையில் தொடங்கி தற்போதும் தொடர்ந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…