நாடு முழுவதும் மாநிலங்களைவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் வேட்பு மனுவை திரும்ப பெற ஜூன் 3 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாகப்போகும் 57 இடங்களுக்கு வருகின்ற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற போகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது, இந்த தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனுய் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் நேற்றுடன் (மே31) முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 3ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திமுகவிற்கு 4 இடங்களும் அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கவிருக்கின்றன. இதில் திமுகவின் 4 இடங்களில் 1 இடத்தை அந்த கட்சியில் தோழமை கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. அதில் காங்கிரசின் முன்னாள் நிதியமைச்சரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். மேலும் திமுக சார்பில் மூன்று இடங்களில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அதிமுக சார்பில் சி.வி. சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…