தமிழகத்தில் கடலில் காற்றாலைகளை அமைப்பதற்கும், நவீன துறைமுகங்களை உருவாக்குவதற்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக நார்வே நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான நார்வே நாட்டு தூதர் ஹான்ஸ் ஜேக்கப் பிரைடன்லண்ட் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்ச எ.வ.வேலுவை சந்தித்தார்.
அப்போது நார்வே நாட்டு தூதருடன் நார்வே நாட்டின் ஆலோசகர் மாரிட் மேரி ஸ்ட்ராண்ட், வணிக ஆலோசகர் கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, அமைச்சர் எ.வ.வேலுவுடன் கடல்வழி போக்குவரத்து தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
கடலில் காற்றாலை அமைத்து அதிலிருந்து மின்சாரம் பெறும் திட்டத்தைத் தொடங்குவதில் தமிழக அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், அது குறித்து இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது.
கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக அப்போது நார்வே ஒப்புக்கொண்ட நிலையில், தமிழகத்தில் நவீன துறைமுகங்கள் அமைப்பதற்கும் ஒத்துழைப்பு தருவதாக, நார்வே குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…