கனமழை காரணமாக இன்று நாளையும் கோவை, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உதடரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக மண் சரிந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது இதனால் அந்த வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் வால்பாறை பகுதிகளில் நேற்று சூறாவளிக்காற்று வீசி பலத்த மழை பெய்தது.இதனால் வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…