Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை மக்களுக்கு போலீசார் நிவாரண உதவி...!!

madhankumar July 06, 2022 & 16:17 [IST]
இலங்கை மக்களுக்கு போலீசார் நிவாரண உதவி...!!Representative Image.

இலங்கையில் இலவு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் தமிழக காவல்துறையின் சார்பில் ரூ. 1.40 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. உணவு தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், நீண்ட நேர மின் வெட்டு என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இலங்கையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் ரூ.1.34 கோடியும், இந்திய போலீஸ் பணி அதிகாரிகள் சாரிப்பில், ரூ.6 லட்சமும் சேர்த்து மொத்தமாக ரூ.1.40 கோடி திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு வழங்கினார். அப்போது அருகில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. முகமது ஷகில் அக்தர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் ஆகியோர் இருந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்