இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனையின் முன்னணியில் உள்ள ஓலா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இதற்கு மாற்று வழியை பற்றி தினம் தினம் பல நிறுவங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டாடா, ஹூண்டாய், டெஸ்லா, ஓலா போன்ற முன்னனி நிறுவனங்கள் எலக்ட்ரில் வாகங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, ஓலா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் செல்லும் கர்களை 2024 ஆம் ஆண்டில் தயாரிக்கவுள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வாகனம் 4 வினாடிகளில் 60 கிமீ வேகத்தில் செல்லும் எனவும், நவீன வசதிகள் கொண்டதாக இந்தக் கார் இருக்கும் எனவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…