தமிழகமே ஓசில போனாலும் நான் போக மாட்டேன், இந்தா பிடி காசை, டிக்கெட் கொடு என்று மூதாட்டி ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தாலும், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் செய்பவர்கள் என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலானது.
இது பெண்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாங்களா ஓசி பயணம் கேட்டோம், நீங்களாக அறிவித்தீர்கள், இப்போது நீங்களே ஏளனமாக பேசுவீர்களா என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஒரு மூதாட்டி தனக்கு இலவச பயணம் வேண்டாம், இந்தா பிடி காசை, டிக்கெட்டைக் கொடு எனக் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. நடத்துனர் பணம் வாங்க மறுத்தும், தொடர்ந்து வாதம் செய்து பணம் கொடுத்தே பயணித்துள்ளார் அந்த மூதாட்டி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…