நாளை நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், எம்பி ராகுல் காந்தியிடம், 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் காவலர்களைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளைநாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படும்" என ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது தமிழக காங்கிரஸ் எம்பி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…