Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆம்னி பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!!

Sekar Updated:
ஆம்னி பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!!Representative Image.

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் ஆம்னி பஸ் ஒன்று மோதியதில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 4 மாடுகளும் உயிரிழந்துள்ளது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் அடுத்த மார்த்தாண்டத்திற்கு 35 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு கிளம்பியது. திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் அந்த பேருந்தை ஓட்டியுள்ளார்.

ஆம்னி பேருந்து உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது , ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல பயணிகள் படுகாயமடைந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த 4 மாடுகளும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மீதமுள்ள மாடுகளை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்