குஜராத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், இன்று மெஹ்சானாவில் "ஹர் கர் திரங்கா" எனும் தேசிய கோடி ஏந்தி யாத்திரை சென்றபோது தெருவில் இருந்த மாடு ஒன்று தாக்கியதில் காலில் காயம் ஏற்பட்டது.
நிதின் படேல் பேரணியை வழிநடத்திச் சென்றபோது மாடு ஒன்று கூட்டத்திற்குள் ஓடி வந்து முன்னாள் துணை முதல்வர் மீது மோதியது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
காங்கிரஸின் சமூக ஊடகப் பொறுப்பாளர் சரல் படேல் பகிர்ந்த ஒரு வீடியோவில், தலைவர் மட்டுமல்ல, பேரணியில் ஈடுபட்டிருந்த பலர் தாக்கப்பட்டு கீழே விழுவதைக் காண முடிந்தது.
மாநிலத்தின் முந்தைய விஜய் ரூபானி அரசில் துணை முதல்வராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்தவர் நிதின் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…