வறுமையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு திருமங்களுக்கான உதவிக்தொகையை தற்போது அதிகரித்து அரசாணையை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களையும் இந்த பதிவில் பாப்போம்.
கோவில்களில் நடைபெறும் ஏழை எளிய மக்களின் திருமணங்களில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்,
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்,
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுதப்படுகிறது.
அதில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்படும். அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகின்றது. ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.20,000/- வழங்கப்படும் உதவித்தொகையானது இனிமேல் ரூ.50,000/-மாக வழங்கப்படும். மேலும் தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, பீரோ,மெத்தை,கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜைப் பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினை அறநிலையத் துறையே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…