ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில், 1315 மீட்டர் நீளத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 266 கிலோமீட்டர் வேகத்தை தாங்கக்கூடியது என்றும், ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புயல் காற்றுடன், கடினமான பருவநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் பாதை திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…