தமிழகத்தில் வணிக ரீதியில் விற்கப்படும் ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டாலும் கூட, தமிழகத்தில் தான் பால் விலை குறைவு என்றும், ஆவின் பாலின் விலை மிகவும் குறைவு என்றும் கூறினார்.
மேலும், "தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலாக இருந்தாலும், பிற மாநிலங்களில் உள்ள, குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் போன்ற பிற பால் நிறுவனங்களின் பாலின் விலை குறித்து தான் பாஜக'வினர் பேச வேண்டும்.
அங்கெல்லாம் விற்கப்படும் பாலின் விலையை விட ஆவின் பால் விலை தமிழகத்தில் குறைவு தான். ஆவினில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…