தமிழக அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சாரிப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கு பெரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆர்வமும், தகுதியும் உடைய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தூயத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வமுடையவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை 9 என்ற முகவரியில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…