Tamilnadu News Live : தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவின் ‘பி’ டீம் தான் ஓபிஎஸ், அவரை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை என்ற கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி இது குறித்து விமர்சனமான கருத்துக்களை தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப முடியாது என தெரிவித்தார். ஜூலை 11ம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடைபெறும்.
மேலும், திமுகவின் ‘பி’ டீம் போல் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். கட்சியை முடக்கும் அவரது செயலை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக கட்சிக்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…