இன்று ஆடிக் கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க முருகன் அருள் புரியட்டும் என தமிழில் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்.
ஆடிக் கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பது ஆன்மீக பெரியோர்களின் வாக்கு. அதிலும் தெய்வ வழிபாடு மிகுந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் இன்று ஆடி கிருத்திகை தினமான இன்று.
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர் மட்டுமல்லாது முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள் என்பது ஐதீகம்.
முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் ஆறு கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை வழிபட்டால் மிகவும் சிறப்புக்குரியது. இந்த தினத்தில் முருகனுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். மேலும் இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து குடும்பத்தில் அன்பும் அமைதியும் பெருகும்.
அந்தவகையில் தமிழகத்தில் இன்று ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு இந்துக்கள் முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
Modi Rasipalan in Tamil- மோடியின் ஜாதகம் பற்றி அறிய வேண்டுமா..!
பிரதமர் மோடி வாழ்த்து
ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்.
— Narendra Modi (@narendramodi) July 23, 2022
இந்நிலையில் பிரதமர் மோடி ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு, "ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்." என தமிழில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…