அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வானதும் செல்லும் என்பதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என இன்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் மீண்டும் இபிஎஸ் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக நீடிக்கிறார். இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…